செவ்வாய், 8 செப்டம்பர், 2009

Mother or maid? Who is the best for the child?

இந்த கேள்வி என் மனதில் பல வருடங்களாக இருக்கு. ஆனால் இதை வெளி இடும் சந்தர்பம் வந்தது இல்லை. சில நாட்களுக்கு முன் சில பதிவுகளை படிக்க நேர்ந்தது. அதன் வெளிப்பாடே இந்த பதிவு. இதில் நான் எந்த நிலைப்பாடும் எடுக்காமல் இருக்க முயற்சி செய்கிறேன்.

முல்லை இன் பதிவு

சகோதரி.. உங்கள் பதிவை நான் விமர்சிக்கவில்லை. அதில் தென்படும் சமூக மாற்றத்தை மட்டுமே குறிக்க ஆசைபடுகிறேன். இந்த பதிவுகளில் எனக்கு பட்டதெல்லாம் தாயின் மனக்குமுறல் மட்டுமே. தன் குழந்தையை தன்னால் நேரடியாக வளர்க்க இயலாமை தெரிகிறது. உங்கள் நேரமின்மை உங்கள் குழந்தைகளை பாதிக்காமல் நீங்கள் பார்த்துக்கொள்வது புரிகிறது. அதற்கு என் பாராட்டுகள். தன் குழந்தைக்கு ஒரு நல்ல செவிலி தாய்க்கான தேடலும் தெரிகிறது. அதற்கு காரணம் நமது தற்போதிய வாழ்க்கை நிலையும், தரமும், எதிர்பார்பும் தான். அது தவறல்ல ஆனால் அது நம்முடைய சந்ததியினரை பாதிக்க கூடாது என்பதே என் கவலை. அதே நேரம் நான் செவிலி தாய் களை குறை சொல்ல வில்லை. ஆனால் அவர்கள் தாய் அல்ல. கட்டாயத்துக்காக தாய் பொறுப்பில் இருப்பவர்கள். அவர்களால் நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் கட்டும் அக்கறை காட்ட முடியாது. அவர்கள் செய்யகுடியது உங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக பார்த்துக்கொள்வது மட்டுமே. வளர்ச்சி அவர்கள் பொறுப்பு அல்ல.

பொறுப்பு தந்தைக்கு இல்லையா என்ற கேள்வி வேண்டாம். இது தாய்க்கு மட்டுமே ஆன சுட்டி அல்ல. பெற்றவர்கள் இருவர்க்கும் ஆன பொது சுட்டி. அம்மாவால் நேரம் ஒதுக்க முடியாத பொழுது, அப்பா அம்மாவாக வேண்டும். செவிலி தாய், தாயாக முடியாது.

இது யாரையும் புண் படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டதில்லை. இது என் மனசில பட்டது....

Azhagiri இப்போ Alagiri

மாமியார் உடைத்தால் மண் குடம்
மருமகள் உடைத்தால் பொன்குடம்

பின்வரும் செய்தி கேட்டு உங்களுக்கு இந்த பழமொழி நினைவு வந்தால் அதற்கு நான் பொறுப்பு அல்ல.

இந்து பண்டிகை கொண்டாடுவது மூடத்தனம் ஆனால் ரமலான் நோன்பு கஞ்சி குடிப்பது நல்லது என்று ஒரு பெரியவர் சில காலங்களுக்கு முன் சொன்னார். அவர் தான் ஐயப்பன் மாலை போடுவதையும் கேலி செய்தார். இன்று அவர் மஞ்சள் துண்டு இல்லாமல் எங்கும் காட்சி கொடுப்பது இல்லை. இதை யாராவது அவரிடம் கேட்க முடியுமா அல்லது கேட்டிருகிரார்களா அல்லது கேட்கத்தான் முடியுமா? கேட்டால் அவன் தமிழ் துரோகி ஆகிவிட மாட்டாநா ? பிறர் நம்பிக்கையை கேலி சையும் உரிமை சிலருக்கு மட்டுமே உண்டா? கேள்வி கேட்டால் அவரிடம் இருந்து என்ன பதில் வரும்? உண்மை காரணம் மட்டும் கண்டிப்பாக வராது.

இதோ அவரது வாரிசு. தனது நம்பிக்கைக்காக செய்த மாற்றத்தை அடுத்தவனின் இயலாமையாக காட்டும் செயல். இந்த செய்தியை ஏன் யாரும் விமர்சிக்க ( விடுங்கள் முதுகு எலும்பு இல்லாதவர்கள் ) வில்லை ? அட சொல்ல கூட இல்லை? வோட்டுக்கு வாங்கிய 500 ருபாய்கு இவ்வளவு நன்றியா ? அப்பா போல் மகன்.


இந்த நாடும் மக்களும் நாசமாய் போகட்டும் என்ற வசனம் தான் நினைவுக்கு வருகிறது.

இது என் மனசில பட்டது....

And, Now.. நன்றி

எழுத விருப்பம் உண்டு
ஆனால் எப்படி எழுதுவது என்று தெரியாது
என்ன எழுதுவது என்றும் தெரியாது.

பிறர் எழுதுவதை படிக்க பிடிக்கும்
படித்ததை வியக்கவும் பிடிக்கும்
சிலநேரம் விமர்சனம் பண்ண துடிக்கும்

வழி அறியாது
வாசித்து கொண்டு மட்டும்
இருந்த பொது
பாதை காட்டிய லட்சுமிகு நன்றி.